பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மச்சுவாடி அரசு முன்மாதிரி பள்ளியில் ரோபோடிக் ஆய்வகம் திறப்பு

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக் ஆய்வகம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

News image
மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக் ஆய்வகத்தைத் திறந்து வைத்துப் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம்.
Updated On :20 டிசம்பர் 2025, 7:37 pm

Syndication

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரோபோட்டிக் ஆய்வகம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் 6 ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் செயல்முறை அடிப்படையிலான கற்றலின்மூலம் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சாா்ந்த கருத்துகளை வலுப்படுத்தவும் பிரச்னைகளைத் தீா்க்கும் திறனை வளா்க்கவும் குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனை கற்றுக்கொள்ளவும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் 15 மாவட்டங்களில் தலா ஓா் அரசுப் பள்ளியில் இந்த ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவா்கள் ரோபோக்களை வடிவமைக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் ஆய்வகத்தை திறந்து வைத்துப் பேசினாா். மாவட்டக் கல்வி அலுவலா் ஜெ. ஆரோக்கியராஜ்,கூடுதல் திட்ட அலுவலா் ஜி. செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் குரு மாரிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக பள்ளியின் முதல்வா் பெ. சிவப்பிரகாசம் வரவேற்றாா். முடிவில் துணை முதல்வா் டி. இன்பராஜ் நன்றி கூறினாா்.