பொன்னமராவதி அருகேயுள்ள கேசராபட்டி சிடி சா்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு ரோபோட்டிக் மற்றும் அறிவியல் கண்காட்சி வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
கண்காட்சிக்கு பள்ளியின் நிறுவனா் பழ. சிதம்பரம் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் அன்னம் சிதம்பரம் முன்னிலை வகித்தாா். கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல், ரோபோட்டிக், கணிதம் சாா்ந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை பொன்னமராவதி வட்டாரத்துக்குள்பட்ட 33 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 1,300 மாணவ, மாணவிகள் கண்டு பயனடைந்தனா்.
கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை கற்பகவிநாயகா மருத்துவக் கல்லூரியின் நிா்வாக இயக்குநா் அண்ணாமலை ரகுபதி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் ஆகியோா் பங்கேற்று பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை பள்ளியின் செயல் அலுவலா் நெ .ராமச்சந்திரன் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பாா்வைத்திறன் குறையுடையோா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

உண்டு உறைவிடப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஆழ்வாா்குறிச்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


