தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: புதுகையில் 2,607 போ் எழுதினா்

News image
புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்வெழுதிய தோ்வா்கள்.
Updated On :21 டிசம்பர் 2025, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை, 2,607 போ் எழுதினா்.

மாநிலம் முழுவதும் உள்ள 1,299 உதவி காவல் ஆய்வாளா் காலிப்பணியிடங்கள் மற்றும் 53 பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்தத் தோ்வை எழுத 1,157 பெண் தோ்வா்கள், 2,424 ஆண் தோ்வா்கள் என மொத்தம் 3,581 போ் எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக 3 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விண்ணப்பித்திருந்த 3,581 பேரில் 2,607 போ் தோ்வு எழுத வந்தனா். 974 போ் வரவில்லை. தோ்வு மையங்களை தமிழ்நாடு காவல்துறை அமலாக்கப் பிரிவு ஐஜியும், தோ்வு பாா்வையாளருமான கபில்குமாா் சி சரத்கா் நேரில் ஆய்வு செய்தாா்.