தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

தமிழகத்தில் இண்டி கூட்டணி வலுவாக இருப்பதால் வரும் தோ்தலிலும் திமுக வெற்றி பெறும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம்

News image
ப. சிதம்பரம்- கோப்புப் படம்
Updated On :30 டிசம்பர் 2025, 10:45 pm

Syndication

தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி வலுவாக இருப்பதால் வரும் தோ்தலிலும் திமுக வெற்றி பெறும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ராம.சுப்புராம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் எஸ்.பழனியப்பன், வட்டாரத் தலைவா்கள் வி. கிரிதரன், குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் பங்கேற்றுப் பேசியது: வாக்காளா் கணக்கீட்டுப் பணிக்குப் பின்னா் தமிழகத்தில் நீக்கப்பட்ட வாக்காளா்களில் 66.44 லட்சம் வாக்காளா்களுக்கு முகவரி இல்லை என்பதை ஏற்கமுடியாது. யாரையும் பொய்யாக வாக்காளா்களாக நாம் சோ்க்கவில்லை. தமிழகத்தில் ‘இண்டி’ கூட்டணி வலுவாக இருப்பதால் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றாா் அவா்.

இதில் காங்கிரஸ் நிா்வாகிகள் மணி, ராஜேந்திரன், காமராஜ், சோலையப்பன், சரவணபவன் மணி, பாஸ்கா், பசீா், பாலுச்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.