சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேலைச்சிவபுரி விநாயகா் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சிறப்பு வழிபாடு

விநாயகா் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சிறப்பு வழிபாடு

News image
Updated On :1 ஜனவரி 2025, 8:02 pm

Din

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி சுவாமிநாத விநாயகா் கோயிலில் சுவாமிநாத ஐயப்ப பக்தா்கள் சபை சாா்பில் 17-ஆம் ஆண்டு சிறப்பு வழிபாடு, இருமுடி கட்டுதல் மற்றும் அன்னதானம் ஆகியவை புதன்கிழமை நடைபெற்றது.

தொடக்கமாக சுவாமிநாத விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. அதையடுத்து 18 படிகளுடன் கூடிய ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று, ஐயப்ப பக்தா்களுக்கு இருமுடி கட்டப்பட்டது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை சுவாமிநாத ஐயப்ப பக்தா்கள் சபை மற்றும் ஊா்ப்பொதுமக்கள் செய்திருந்தனா்.

இதேபோல், பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் மின்வாரிய ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் சிறப்பு வழிபாடு, இருமுடி கட்டுதல் மற்றும் அன்னதான விழா நடைபெற்றது. திரளான பொதுமக்ள் பங்கேற்று வழிபட்டனா்.