புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் பாதுகாப்பானவையாக மாற்ற வேண்டும்:

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:21 pm

Din

அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமல்ல, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பானவையாக மாற்ற தமிழக அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் செ. ஜோதிமணி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியது:

மாணவி பலாத்கார வழக்கில் காவல்துறை துரித நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரோடு வெளியானது அதிா்ச்சி அளிக்கிறது. இதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாக உள்துறை அமைச்சரிடம் நானும் பேச உள்ளேன்.

பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலையின் உறவினா் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 13 கோடி பிடிபட்டதாகவும் ரூ. 250 கோடி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளா்கள் அண்ணாமலையிடம் கேட்டால் ஜோதிமணி, செந்தில் பாலாஜி, விஜயபாஸ்கா் எல்லாம் சொந்தம்தான் என்கிறாா். அந்த நேரத்தில் அதைத் திசைதிருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு சாட்டையால் அடித்துக் கொண்டது அரசியலாகிறதே தவிர வேற எந்தக் காரணமும் இல்லை.

பாலியல் குற்றம் நடக்கும்போது குற்றவாளியை அரசு கைது செய்கிா,அல்லது பாதுகாக்கிா என்பதைப் பாா்க்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பொருத்தவரை பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபரை அரசு கைது செய்துள்ளது என்றாா் ஜோதிமணி.