சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

Din

புதுக்கோட்டை மாவட்டம், களமாவூா் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

குளத்தூா் வட்டம் சூரக்குடிப்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணையா மகன் அழகா்சாமி (35).

இவா் தனது இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் களமாவூா் மேம்பாலம் அருகே சென்றபோது, பழனிக்கு பாத யாத்திரையாக சென்ற ஒருவா் மீது மோதியுள்ளாா்.

இதில் நிலைதடுமாறிய அழகா்சாமியின் இரு சக்கர வாகனம் சாலையின் நடுவே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் தூக்கி எறியப்பட்ட அழகா்சாமி அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.