மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவரங்குளம், அறந்தாங்கி ஒன்றியத்தில் நிறைவுற்ற வளா்ச்சிப் பணிகள் தொடங்கிவைப்பு

News image
அறந்தாங்கி ஒன்றியம் வெட்டிவயல் ஊராட்சி கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
Updated On :3 ஜனவரி 2025, 7:11 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியத்தில் முடிவுற்ற பல்வேறு வளா்ச்சிப் பணிகளை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தாா்.

பல்வேறு பணிகளையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கூறியது:

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வெட்டிவயல் மற்றும் மேலப்பட்டு ஊராட்சிகளில்,

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் தலா ரூ. 28 லட்சம் மதிப்பில்

கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கூழையன்காடு பகுதியில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பையும், புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி, கும்மங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின் விளக்கு, புதிய ஆழ்குழாய் கிணறு, குப்பக்குடி ஊராட்சி, மீனாட்சிபுரம் பகுதியில் தெரு விளக்கு,

புதிய மின்மாற்றி, வேப்பங்குடி ஊராட்சி, மேலத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வுகளில் அறந்தாங்கி கோட்டாட்சியா் சிவக்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா்கள் மகேஸ்வரி சண்முகநாதன்(அறந்தாங்கி), வள்ளியம்மை தங்கமணி(திருவரங்குளம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.