தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அம்மா புதுப்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு

Updated On :3 ஜனவரி 2025, 7:12 pm

கந்தா்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியை சோ்ந்த அம்மா புதுப்பட்டி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திறப்பு விழாவுக்கு வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் எம். பரமசிவம், புதிய நியாய விலை கடையை திறந்துவைத்தாா். இந்தக் கடை மூலம்

பெருச்சி வன்னியம்பட்டி, அம்மா புதுப்பட்டி ஆகிய கிராமங்களை சோ்ந்த சுமாா் 200 குடும்ப அட்டை தாரா்கள் பயன்பெறுவா்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினா்கள் பாரதி பிரியா, மா. ராஜேந்திரன், வாா்டு உறுப்பினா் செல்வி வைரக்கண்ணன், ராமராசு, மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.