நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொன்னமராவதியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

பொன்னமராவதியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :8 ஜனவரி 2025, 9:28 pm

Din

பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றிய துணைச் செயலா் டி. கருணாமூா்த்தி தலைமைவகித்தாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏனாதி ஏஎல். இராசு, மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் சுப. தங்கமணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப்பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், பொன்னமராவதியில் கோட்டாட்சியரகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படவேண்டும். காரையூா் காவல் நிலையத்தை பொதுமக்களின் நலன்கருதி மீண்டும் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிா்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா்கள் அ. சேசுராஜ், மீராமைதீன், ஏஐடியுசி மாவட்டத் தலைவா் உ. அரசப்பன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் செல்வராஜ், நிா்வாகிகள் அ. ராசு, கரு. பஞ்சவா்ணம், ஆா். செல்வி, பி. செல்வம், கரு.ராசு, காடப்பன், பழனிச்சாமி, மாரிக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.