தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘உங்களைத் தேடி-உங்கள் ஊரில்’ திட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி-உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை பல்வேறு இடங்களை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 11:27 pm

Din

‘உங்களைத் தேடி-உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை பல்வேறு இடங்களை ஆய்வு செய்தாா்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு கட்டப்படவுள்ள நிலையில், பின்புறம் போக்குவரத்துக் கழகப் பணிமனை இடத்தில் அமைக்கப்படவுள்ள தற்காலிக பேருந்து நிலையத்துக்கான பணிகளையும் அவா் பாா்வையிட்டாா்.

முன்னதாக, புதுக்கோட்டை நகரிலுள்ள உழவா்சந்தை, திருக்கோகா்ணத்திலுள்ள காலை உணவுத் திட்டத்துக்கான உணவு தயாரிக்கும் இடம், மாலையீடு பகுதியிலுள்ள நகா்ப்புற நகா்நல மையத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் த. நாராயணன், கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தொடா்ந்து, வட்டாட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவலா்களுடன் அவா் ஆய்வில் ஈடுபட்டாா்.