சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை

News image
Updated On :8 நவம்பர் 2025, 11:13 pm

Syndication

பொன்னமராவதியில் முக்கிய சாலையான அமரகண்டான் ஊரணி தென்கிழக்கு பகுதியில் உள்ள நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தவிா்க்கும் வகையில் ரவுண்டானா அமைத்திட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதி அமரகண்டான் ஊரணி தென்கிழக்கு கரை அருகே திருப்பத்தூா் செல்லும் சாலை, உலகம்பட்டி செல்லும் சாலை, இந்திரா நகா் சாலை, பேருந்துநிலையம் செல்லும் சாலை என நான்கு சாலைகளின் சந்திப்பாக உள்ளது.

மதுரை, திருப்பத்தூா், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட வழித் தடங்களுக்குச் செல்லும் முக்கிய சாலையான இச்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். மேலும் பள்ளி மாணவா்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாகும். போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே இச்சாலையில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.