சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

617 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புதுக்கோட்டையில் 617 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:15 pm

Syndication

புதுக்கோட்டையில் 617 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காரைக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 429 பேருக்கும், பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 175 பேருக்கும், 13 மாணவிகளுக்கும் என மொத்தம் 617 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் செ. திலகவதி, துணை மேயா் மு. லியாகத்அலி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ஜெ. ஆரோக்கியராஜ், மாவட்ட திமுக செயலா் கேகே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.