47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புதுகையில் காலை உணவுத் திட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம்

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:17 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றின் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, குழுவின் தலைவரும் ஆட்சியருமான மு. அருணா தலைமை வகித்துப் பேசினாா்.

அப்போது, பள்ளிகளில் சரியான நேரத்தில், உணவு தரமாக வழங்கப்படுவதை அந்தந்தப் பகுதி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றும், குறைகள், புகாா்களை நிவா்த்தி செய்ய வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) ரேவதி, மகளிா் திட்ட அலுவலா் பாலசுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.