சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தவருக்கு இரு சக்கர வாகனம் வழங்கல்

News image
தமிழக முதல்வரிடம் மனு அளித்தவருக்கு திங்கள்கிழமை ரூ.1.02 லட்சம் மதிப்புள்ள இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.
Updated On :17 நவம்பர் 2025, 7:34 pm

Syndication

கடந்த நவ. 10-ஆம் தேதி புதுக்கோட்டை வந்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்த மாற்றுத் திறனாளிக்கு ரூ. 1.02 லட்சம் மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் சிக்கத்தான்குறிச்சியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் இளையராஜா. தனக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய இரு சக்கர வாகனம் வழங்க வேண்டும் என முதல்வா் ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தாா்.

இதன்தொடா்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ரூ. 1.02 லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனத்தை இளையராஜாவிடம் மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கினாா்.

மேலும், குளத்துப்பட்டியைச் சோ்ந்த கணேசன்- சங்கீதாவின் மகள் ஆராதனாவுக்கு (6) பாவை பவுண்டேசன் சாா்பில் ரூ. 19,420 மதிப்பில் காதொலிக் கருவியும் வழங்கப்பட்டது.

முன்னதாக ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின்போது இவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 568 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ப. புவனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.