விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தல்

News image
Updated On :20 நவம்பர் 2025, 10:30 pm

Syndication

பொன்னமராவதி அருகேயுள்ள திருக்களம்பூா் ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியான திருக்களம்பூரில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் வசிக்கும் சுமாா் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆடு,மாடு, கோழிகளை வளா்க்கின்றனா்.

இவற்றுக்கு ஏதேனும் நோய்கள் ஏற்பட்டால் வேந்தன்பட்டி கால்நடை மையம் மற்றும் பொன்னமராவதி கால்நடை மருத்துவமனைக்கு வர வேண்டியுள்ளது. இதனால் கால, பொருள் விரயம் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் கால்நடைகள் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே திருக்களம்பூரில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.