சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நில அளவை அலுவலா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:07 pm

Syndication

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் தமிழ்நாடு நில அளவை அலுவலா் ஒன்றிப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, இச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ச. செல்லதுரை தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் சு. தேவி, இணைச் செயலா் ஆா். அருண்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரெங்கசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வு முடிவுகளை வெளியிட்டு, காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளா் மற்றும் ஆய்வாளா் பணியிடங்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும்.

புல உதவியாளா் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையிலோ, தனியாா் மூலமாகவோ நிரப்பாமல் நேரடியாக காலமுறை ஊதியத்துடன் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.