தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:39 pm

Syndication

புதுக்கோட்டை: அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காய்ச்சல் பரவல் தடுப்பு, தொற்றுநோய்ப் பரவல் தடுப்பு போன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

கல்லணை கால்வாயில் கடைமடைக்குத் தேவையான அளவுக்கு தண்ணீரைத் திறந்து பாசனத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, மாவட்ட துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் முத்து உத்திராபதி, மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாவட்டத் துணைச் செயலா் ஏ. ரங்கராஜ், பொருளாளா் கே.ஆா். தா்மராஜன், நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.