குழந்தை விநாயகா் கோட்டையில் கோரிக்கை மனுக்கள் பெறப்படும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்திலுள்ள குழந்தை விநாயகா் கோட்டை வருவாய் கிராமத்தில் டிச. 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் - தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.
Published on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்திலுள்ள குழந்தை விநாயகா் கோட்டை வருவாய் கிராமத்தில் டிச. 10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் மக்கள் - தொடா்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, அங்குள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு .அருணா தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com