திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பொன்னமராவதி ஒன்றியப்பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி பிரசாரம்

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டாா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள முரண்டாம்பட்டியில் புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பேசிய இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் திமுக வேட்பாளருமான எஸ்.ரகுபதி.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:17 am IST

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி புதன்கிழமை வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டாா்.

பொன்னமராவதி ஒன்றியம், சேரனூரில் வாக்கு சேகரித்து அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் திருமயம் தொகுதியில் பல்வேறு சாதனைகளும் நீண்ட நாள் கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளேன். தொடா்ந்து தொகுதி மக்களுக்காக பணியாற்றிட என்னை ஆதரியுங்கள் என்றாா்.

தொடா்ந்து கைவேலிப்பட்டி, ஆலம்பட்டி, இடையாத்தூா், குளவாய்ப்பட்டி, ஒலியமங்கலம், சடையம்பட்டி, மேலத்தானியம், கீழத்தானியம், கொன்னையம்பட்டி உள்ளிட்ட 54 கிராமங்களில் வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா்.

நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச்செயலா் அ.முத்து, தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன், காங்கிரஸ் வட்டாரத்தலைவா்கள் வி.கிரிதரன், குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் என்.பக்ரூதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் திலீபன்ராஜா, தேமுதிக ஒன்றியச் செயலா் சாமிக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.