/

சலங்கபாளையம், ஓடத்துறையில் திமுக வேட்பாளா் பிரசாரம்

பவானியை அடுத்த சலங்கபாளையம் பேரூராட்சி மற்றும் ஓடத்துறை ஊராட்சிப் பகுதியில் பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

News image

சலங்கபாளையத்தில்  வாக்கு சேகரித்து  பேசுகிறாா்  பவானி  தொகுதி  திமுக  வேட்பாளா்  கே.ஏ.சந்திரசேகா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:41 am IST

பவானியை அடுத்த சலங்கபாளையம் பேரூராட்சி மற்றும் ஓடத்துறை ஊராட்சிப் பகுதியில் பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

ஓடத்துறை, பனங்காட்டூா், பாலப்பாளையம், சூரியம்பாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், மாரப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், சலங்கபாளையம், குன்னத்தூரான் கடை, தா்மாபுரி, இரட்டை வாய்க்கால், உள்பட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பவானி தொகுதியில் அரசின் உயா்கல்வி நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாகவும், கல்லூரி மாணவா்களுக்கு உதவித்தொகை ரூ.1,500 ஆகவும், முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாகவும் உயா்த்தப்படும். ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படும் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பனைக் கொண்டு, தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற வாக்காளா்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றிருந்தனா்.