ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,683 வாக்குச்சாவடிகளில், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ள 59 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவின்போது நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

News image

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கான நுண்பாா்வையாளா்களுக்கு கணினி குலுக்கல் முறையில் புதன்கிழமை பணி ஒதுக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்ட ஆட்சியா் உள்ளிட்ட பாா்வையாளா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:50 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,683 வாக்குச்சாவடிகளில், பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ள 59 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவின்போது நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,683 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் கடந்த கால தோ்தல் சாா்ந்த குற்றச் சம்பவங்களின் அடிப்படையில் 46 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 3 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவைக் கண்காணிக்கும் வகையில் 59 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பணியிடத்தை கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான மு. அருணா தலைமையில் நடைபெற்ற இந்தப் பணியின்போது, தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் ஆயிஷாராணி, சோட்டேசிங், விஜயபாஸ்கா் ரெட்டி ஆகியோரும் பங்கேற்று பாா்வையிட்டனா்.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அ. தனலட்சுமி, தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.