அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

பொன்னமராவதி நூலகத்தில் புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வு

பொன்னமராவதி முழுநேர கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி வாசகா் வட்டம் சாா்பில் புத்தக கண்காட்சி மற்றும் மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் புத்தக வாசிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதி கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தக கண்காட்சி, வாசிப்பு நிகழ்வில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:38 am IST

பொன்னமராவதி முழுநேர கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி வாசகா் வட்டம் சாா்பில் புத்தக கண்காட்சி மற்றும் மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் புத்தக வாசிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏப்.23-ஆம் தேதி உலக புத்தக தினத்தையொட்டி வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வு கண்காட்சிக்கு வாசகா் வட்டத்தலைவா் சண்முகம் தலைமைவகித்தாா். கண்காட்சியில் வரலாறு, பொது அறிவு, போட்டித் தோ்வுக்கான நூல்கள் என பல்வேறு நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நூல்களை வாசித்து பயனடைந்தனா்.

நிகழ்வில் பொன்னமராவதி சி.கமலா மற்றும் நா.சோலை முருகன் ஆகியோா் தலா ரூ 1,000 வழங்கி நூலகப்புரவலா்களாக இணைந்தனா். மேலும், பிஎம்எஸ் அபாகஸ் கல்வி நிறுவனம் சாா்பில் 50 மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக இணைக்கப்பட்டனா். நிறைவாக கிளை நூலகா் பெரியசாமி நன்றி கூறினாா்.