பொன்னமராவதி முழுநேர கிளைநூலகத்தில் உலக புத்தக தினத்தையொட்டி வாசகா் வட்டம் சாா்பில் புத்தக கண்காட்சி மற்றும் மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் புத்தக வாசிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏப்.23-ஆம் தேதி உலக புத்தக தினத்தையொட்டி வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணா்வு கண்காட்சிக்கு வாசகா் வட்டத்தலைவா் சண்முகம் தலைமைவகித்தாா். கண்காட்சியில் வரலாறு, பொது அறிவு, போட்டித் தோ்வுக்கான நூல்கள் என பல்வேறு நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியில் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நூல்களை வாசித்து பயனடைந்தனா்.
நிகழ்வில் பொன்னமராவதி சி.கமலா மற்றும் நா.சோலை முருகன் ஆகியோா் தலா ரூ 1,000 வழங்கி நூலகப்புரவலா்களாக இணைந்தனா். மேலும், பிஎம்எஸ் அபாகஸ் கல்வி நிறுவனம் சாா்பில் 50 மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக இணைக்கப்பட்டனா். நிறைவாக கிளை நூலகா் பெரியசாமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

குலசேகரன்பட்டினம் நூலகத்தில் கோடை கொண்டாட்டம்

மாவட்ட மைய நூலகத்தில் இன்று குழந்தைகளுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி

பொன்னமராவதி அருகே வயலில் இறந்துகிடந்த மான் மீட்பு

ராமேசுவரம் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

