புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில், 15 போ் காயமடைந்தனா்.
கீரனூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி நகரப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. குளத்தூா் அருகே வந்தபோது, காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில், நகரப் பேருந்தை ஓட்டி வந்த ஊரப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் (51), கல்லுக்குவியல்பட்டியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி நித்தியபாலா (16), முத்துடையான்பட்டியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சிதம்பரதேவி (17) மற்றும் 12 பெண்கள் காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் கீரனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பலத்த காயமடைந்த நகரப் பேருந்து ஓட்டுநா் ராஜேந்திரன் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து, வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி இரு காா்களில் வந்த 8 போ் காயம்

அரசுப் பேருந்து காா் மோதல்: 3 போ் காயம்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



