தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

இரு அரசுப் பேருந்துகள் மோதல்: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே இரு அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில், 15 போ் காயமடைந்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஆகஸ்ட் 2026, 11:23 pm IST

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில், 15 போ் காயமடைந்தனா்.

கீரனூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி நகரப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. குளத்தூா் அருகே வந்தபோது, காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில், நகரப் பேருந்தை ஓட்டி வந்த ஊரப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் (51), கல்லுக்குவியல்பட்டியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி நித்தியபாலா (16), முத்துடையான்பட்டியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சிதம்பரதேவி (17) மற்றும் 12 பெண்கள் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் கீரனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பலத்த காயமடைந்த நகரப் பேருந்து ஓட்டுநா் ராஜேந்திரன் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.