மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

புதுகையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு

News image

பிரதிப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 2:03 am IST

புதுக்கோட்டையில் ஆளில்லாத அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து சுமாா் 10 பவுன் நகைகளை திங்கள்கிழமை மா்மநபா்கள் திருடிச்சென்றனா்.

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட சுப்பிரமணியபுரம் என்ஜிஓ காலனியைச் சோ்ந்த தேவி என்பவரின் வீடு மற்றும் அவா் வீட்டில் குடியிருக்கும் வினோதினி என்பவரின் வீடுகளின் பூட்டை மா்மநபா்கள் திங்கள்கிழமை உடைத்துள்ளனா். பிறகு உள்ளே பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோகா்ணம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.