புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் உள்கோட்டத்தில் பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, அவருடன் பணிபுரிந்த போலீஸாா் திரட்டிய ரூ. 13.30 லட்சம் குடும்ப நல நிதிக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வியாழக்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் உள்கோட்டத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா், கடந்த 2025 ஆக. 1ஆம் தேதி விபத்தில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவருடன் பணிபுரிந்து வந்த 1997ஆம் ஆண்டு 2ஆவது பேட்ஜ் காவலா்கள் 2,623 போ் ரூ. 13.30 லட்சம் குடும்ப நல நிதி திரட்டினா்.
இந்தத் தொகைக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வியாழக்கிழமை, மறைந்த உதவி ஆய்வாளா் முத்துக்குமாரின் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.
தொடர்புடையது

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே கள் விற்பனையை மறைத்ததாக தொழிலாளியை சுட்ட எஸ்.ஐ.

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


