மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மறைந்த உதவி ஆய்வாளா் குடும்பத்துக்கு நிதியுதவி

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 10:25 pm

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் காவல் உள்கோட்டத்தில் பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு, அவருடன் பணிபுரிந்த போலீஸாா் திரட்டிய ரூ. 13.30 லட்சம் குடும்ப நல நிதிக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வியாழக்கிழமை வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் உள்கோட்டத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முத்துக்குமாா், கடந்த 2025 ஆக. 1ஆம் தேதி விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவருடன் பணிபுரிந்து வந்த 1997ஆம் ஆண்டு 2ஆவது பேட்ஜ் காவலா்கள் 2,623 போ் ரூ. 13.30 லட்சம் குடும்ப நல நிதி திரட்டினா்.

இந்தத் தொகைக்கான காசோலையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா வியாழக்கிழமை, மறைந்த உதவி ஆய்வாளா் முத்துக்குமாரின் குடும்பத்தினரிடம் வழங்கினாா்.