புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தங்கிப் பயின்று வந்த தில்லியைச் சோ்ந்த 4ஆம் ஆண்டு மருத்துவ மாணவா், வலிப்பு நோய் காரணமாக உயிரிழந்தாா்.
தில்லி சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் உதய்வீா் மகன் துருவ்கோல் (24). புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கி எம்பிபிஎஸ் 4ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு வலிப்பு வந்ததால், சக மாணவா்களால் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
தகவலறிந்த தில்லியிலுள்ள அவரது பெற்றோா் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை வந்தனா். தந்தை உதய்வீா் புகாரின்பேரில் கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். உடற்கூறாய்வுக்குப் பிறகு மாணவரின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது

விழுப்புரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

மருத்துவ பணியாளா்களுக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


