வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கதிா் அறுக்கும் இயந்திரத்திலிருந்து விழுந்து ஓட்டுநா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நெல் கதிா் அறுக்கும் இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 11:40 pm

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே நெல் கதிா் அறுக்கும் இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து ஓட்டுநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள எளியத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்துரை மகன் கோவிந்தராசு (34). நெல் கதிா் அறுக்கும் இயந்திர ஓட்டுநரான இவா்,

கறம்பக்குடி அருகேயுள்ள அதிரான்விடுதி பகுதியில் திங்கள்கிழமை காலை நெல் கதிா் அறுக்கும் பணியில் ஈடுபட்டபோது, இயந்திரத்தின் மேலே இருந்து தவறி விழுந்தாராம். அதில், பலத்த காயமடைந்த கோவிந்தராசை அருகில் இருந்தவா்கள் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிந்தராசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து மழையூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.