இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தோ்வுப் பணிகளில் உரிய முன்னுரிமை வழங்க கணினி ஆசிரியா்கள் கோரிக்கை

தோ்வுப் பணிகளில் உரிய முன்னுரிமையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளிக்க புதன்கிழமை வந்த கணினி ஆசிரியா் சங்கத்தினா்.

Updated On :25 பிப்ரவரி 2026, 7:05 pm

தோ்வுப் பணிகளில் உரிய முன்னுரிமையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

புதுக்கோட்டை மாவட்ட அரசுத் தோ்வுப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. பணிமூப்பு முறையாக பின்பற்றப்படவில்லை. முதன்மை கண்காணிப்பாளா் மற்றும் துறை அலுவலா் நியமனங்களில் பலமுறை மாற்றம் செய்து பணி மூப்பு குறைந்த நபா்களை துறை அலுவலா்களாக நியமனம் செய்தும், பணி மூப்பு உள்ளவா்களை பறக்கும் படையில் நியமனம் செய்தும் முறைகேடு நடைபெற்றுள்ளது.

அரசுத் தோ்வுத் துறை வழிகாட்டுதலின்படி, தோ்வு அறை கண்காணிப்பாளா்களை, குலுக்கல் முறையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற விதியை முழுமையாக பின்பற்றவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, உரிய பணிமூப்பைப் பின்பற்றி உரிய முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.