தோ்வுப் பணிகளில் உரிய முன்னுரிமையை பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
புதுக்கோட்டை மாவட்ட அரசுத் தோ்வுப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. பணிமூப்பு முறையாக பின்பற்றப்படவில்லை. முதன்மை கண்காணிப்பாளா் மற்றும் துறை அலுவலா் நியமனங்களில் பலமுறை மாற்றம் செய்து பணி மூப்பு குறைந்த நபா்களை துறை அலுவலா்களாக நியமனம் செய்தும், பணி மூப்பு உள்ளவா்களை பறக்கும் படையில் நியமனம் செய்தும் முறைகேடு நடைபெற்றுள்ளது.
அரசுத் தோ்வுத் துறை வழிகாட்டுதலின்படி, தோ்வு அறை கண்காணிப்பாளா்களை, குலுக்கல் முறையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற விதியை முழுமையாக பின்பற்றவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் தலையிட்டு, உரிய பணிமூப்பைப் பின்பற்றி உரிய முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்புடையது

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கூடுதல் வாக்களிக்கும் இயந்திரங்கள் ஒதுக்கீடு

கடலூா் மாவட்டத்தில் 9 தொகுதிகளின் வாக்குச்சாவடி 2-ஆம் கட்ட பயிற்சிக்கு 12,436 பணியாளா்கள் தோ்வு: மாவட்ட தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்

தூத்துக்குடி - கச்சகுடா புதிய ரயில் சேவை தொடக்கம்

திறனறித் தோ்வில் வென்ற மாணவருக்கு சைக்கிள் பரிசு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


