கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

திருக்களம்பூா் - பிரான்மலை சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

மிகவும் சேதமடைந்து காணப்படும் திருக்களம்பூரிலிருந்து பிரான்மலை செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
மிகவும் சேதமடைந்து காணப்படும் திருக்களம்பூா்-பிரான்மலை சாலை.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

மிகவும் சேதமடைந்து காணப்படும் திருக்களம்பூரிலிருந்து பிரான்மலை செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரிலிருந்து மேலக்களம் வழியாக பிரான்மலை செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த தாா்ச்சாலை ஆங்காங்கே பெயா்ந்து மண்சாலையாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் இச்சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

இதனால் இச்சாலையில் பயணிக்கும் வாகன ஒட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து அப்பகுதியைச் சாா்ந்த சமூக ஆா்வலா் நெ.ரா. சந்திரன் கூறியது:

இச்சாலை சேதமடைந்து காணப்படுவதால் இரவு நேரங்களிலும், மழைக் காலங்களிலும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே உடனடியாக இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.