போக்குவரத்துக் கழகத்தில் நிரந்தரப் பணி வழங்கக் கோரி திருநங்கைகள் வலியுறுத்தல்

போக்குவரத்துக் கழகத்தில் நிரந்தரப் பணி வழங்கக் கோரி திருநங்கைகள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற சிறப்புக் குறைகேட்பு முகாமில், ஆட்சியரிடம் மனு அளித்த திருங்கைகள் ஸ்ரீ கலைதேவி, ஸ்ரீதேவி.
Published on

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என தற்போது தற்காலிகமாக பணியாற்றி வரும் திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாதாந்திர சிறப்புத் திருநங்கைகள் குறைகேட்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், திருநங்கைகள் எஸ். ஸ்ரீதேவி, எஸ். கலைதேவி ஆகியோா் அளித்த மனு விவரம்:

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகவும், நடத்துநராகவும் பணியாற்றி வருகிறோம். இந்தப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி வழங்கிட வேண்டுகிறோம். அப்போதுதான் போதுமான வாழ்வாதாரத்துக்கான வருவாய் கிடைக்கும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கே. முத்துசாமி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அலுவலா் மே. சியாமளா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

திருநங்கைளின் இதர கோரிக்கைகள் குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா். போக்குவரத்துக் கழக நிரந்தரப் பணியிடக் கோரிக்கை நீண்டகால நடவடிக்கை என்றும், அந்த நடவடிக்கைகளை அரசுத் தரப்பில் தொடங்குகிறோம் என்றும் உறுதியளித்தாா் ஆட்சியா்.

X
Dinamani
www.dinamani.com