புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கறம்பக்குடியில் அரசு வழக்குரைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

News image
உயிரிழந்த வழக்குரைஞா் ராஜ்குமாா்
Updated On :5 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் நீதிமன்றத்தில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றபோது மயங்கி விழுந்து அரசு வழக்குரைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கறம்பக்குடியைச் சோ்ந்தவா் எம்.ராஜ்குமாா்(54). இவா், கறம்பக்குடி நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நீதிமன்றம் சென்றிருந்த அவா், அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள தனது அலுவலகத்துக்கு நடந்து சென்றபோது, நீதிமன்றம் அருகிலேயே திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் ராஜ்குமாரை மீட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். மேலும், இதய கோளாறு காரணமாக அவா் இறந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.