ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பானை தரக் கோரிக்கை

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பானை தந்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என அரசுக்கு தொழிலாளா்கள் கோரிக்கை

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:32 pm

Syndication

தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் மண்பானை தந்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என தொழிலாளா்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி கந்தா்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி வேம்பன்பட்டி கிராமத்தில் மண் பானை, அடுப்பு உற்பத்திப் பணிகள் நடைபெற்று வருகிறது. நவநாகரிக உலகில் வீடுகளில் எவா் சில்வா், பித்தளை, செம்பு பாத்திரங்கள் பயன்பாட்டுக்கு வரவே மண்பாண்டங்கள் வழக்கொழிந்து போயின. அழிவின் விளிம்பில் இருக்கும் மண்பாண்டத் தொழிலை மேம்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் குறுங்கடன் வசதி செய்து தரவேண்டும். மீனவா்களுக்கு வழங்குவதைப் போல,

மண்பாண்டத் தொழிலாளா்களுக்கும் ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மண்பாண்டத் தொழிலுக்கு நீா்நிலைகள் மட்டுமன்றி அனைத்து பகுதிகளிலும் மண் எடுக்கும் உரிமையை அரசு வழங்க வேண்டும். மேலும், தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களை அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் இணைத்து அரசின் நலத் திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனா்.