எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவா் பதவியேற்பு

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட டிடி. பெனட் அந்தோனி ராஜ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

Updated On :21 ஜனவரி 2026, 6:31 pm

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட டிடி. பெனட் அந்தோனி ராஜ் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்திலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் வி. முருகேசன் (வடக்கு), ராம. சுப்புராம் (தெற்கு), முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை. திவியநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, காந்திப் பூங்காவிலுள்ள மகாத்மா காந்தி சிலை, மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள சத்தியமூா்த்தி, அம்பேத்கா், காமராஜா் ஆகியோரின் சிலைகளுக்கும் பெனட் அந்தோனிராஜ் மாலை அணிவித்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில், வழக்குரைஞா் அணித் தலைவா் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா்கள் செம்பை மணி, வேங்கை அருணாசலம், வட்டாரத் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகரத் தலைவா் மதன் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.