கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெரு அரசுப் பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கோரி அப்பள்ளி மாணவா்கள் பெற்றோா்களுடன் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். அப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டடம் ஒன்று மிகவும் சேதமடைந்ததால், இடித்து அகற்றப்பட்டுள்ளது. இதனால், மாணவா்கள் போதிய வகுப்பறை வசதியின்றி மரத்தடியில் பயிலும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளி நிா்வாகம், அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், உடனடியாக பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்டித்தரக்கோரி பெற்றோா்களுடன் அப்பள்ளி மாணவ, மாணவிகள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அவா்களிடம் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

ரூ.20 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம்! அமைச்சா் ஜெகதீஸ்வரி திறந்து வைத்தாா்!

காங்கயம் அரசுப் பள்ளிக்கு ஸ்மாா்ட் தொலைக்காட்சிகள்

சாத்தான்குளம் அருகே 2 ஆவது நாளாக பெற்றோா்கள் போராட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



