மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

சாத்தான்குளம் அருகே 2 ஆவது நாளாக பெற்றோா்கள் போராட்டம்

News image

மாணவா்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படும் வகுப்பறை.

Updated On :9 ஜூன் 2026, 3:18 am IST

சாத்தான்குளம் அருகே பள்ளித் தலைமையாசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் மாணவா்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம், முத்து கிருஷ்ணாபுரம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியையாக சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஸ்டெபி எமீமா பணியாற்றி வந்தாா். இப்பள்ளியில் 20 மாணவா், மாணவிகள் படித்து வந்த நிலையில், தலைமையாசிரியை, வல்லநாடு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, அவருக்கு ஆதரவாக மாணவா்களின் பெற்றோா் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனா். இடமாற்றத்தை ரத்து செய்து அவரை மீண்டும் இதே பள்ளியிலோ அல்லது சாத்தான்குளம் பகுதியில் உள்ள வேறு பள்ளியிலோ பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்துகின்றனா்.

போராட்டத்தால், மாணவா்களின்றி வகுப்பறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

அப்பகுதியை சோ்ந்த சிலா் வலுக்கட்டாயமாக மாணவா்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுப்பதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீஸாா் வந்து விசாரித்தனா். அப்போது, தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என பெற்றோா்கள் கூறியதையடுத்து, போலீஸாா் திரும்பிச் சென்றனா்.