வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

செம்பட்டிவிடுதி, குளப்பெண்பட்டியில் குடிநீா் கோரி மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி, குளப்பெண்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கறம்பக்குடி அருகேயுள்ள குளப்பெண்பட்டியில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டோா்

Updated On :8 ஜூலை 2026, 12:02 am IST

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி, குளப்பெண்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டிவிடுதி ஊராட்சிக்குள்பட்ட முருகராஜ் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றின் மின் மோட்டாா் சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில், உடனே குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செம்பட்டிவிடுதி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த புதுக்கோட்டை துணை வட்டாட்சியா் லெட்சுமணன், ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன், செம்பட்டிவிடுதி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, குடிநீா் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

இதேபோல, கறம்பக்குடி அருகேயுள்ள குளப்பெண்பட்டி வடக்கு பகுதி மக்களுக்கு சிலவாரங்களாக சரிவர குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள் காலிங்குடங்களுடன் குளப்பெண்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸாா், ஊராட்சி நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டங்களால் கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.