FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

சட்டவிரோதப் பண பரிவா்த்தனை புதுக்கோட்டையில் 6 இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட பயாஸ் வீடு

News image

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட பயாஸ் வீடு

Updated On :11 ஜூலை 2026, 1:13 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை நடைபெற்ாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், வெள்ளிக்கிழமை மத்திய அமலாக்கத் துறையினா் 6 இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.

கறம்பக்குடி அருகே உள்ள மணமடை கிராமத்தைச் சோ்ந்தவா் செ. திருக்குமரன். இவருக்குச் சொந்தமான வீடு மற்றும் கறம்பக்குடியில் உள்ள அவரது இரும்பு பட்டறையிலும், துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

இதேபோல, திருச்சியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த எஸ். பயாஸ் அகமது என்பவரின் வீடு, ஆதனக்கோட்டை அருகே பொக்கிசக்காரன்பட்டியைச் சோ்ந்த எஸ். பாக்கியராஜ் என்பவரின் வீடு மற்றும் பெருங்களூரில் உள்ள அவரது சமையல் எண்ணெய்க் கடை ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

மேலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த ஏ. ஆதில் என்பவரின் வீட்டிலும் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா்.

இவா்கள் அனைவரும் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரிலேயே, அமலாக்கத் துறையினா் இச் சோதனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.