புதுக்கோட்டைத் தொழிலாளா் நல அலுவலகத்தில் பிஇ பொறியியல் படித்த மாற்றுத் திறனாளிக்கு, கணினி இயக்குநா் பணியிடத்துக்கான தற்காலிகப் பணி நியமன ஆணைகளை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் குளமங்கலம் தெற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா். பொறியியல் பட்டதாரியான இவா், இருகால்களும் செயல்படாத மாற்றுத் திறனாளி.
கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பத்தைச் சோ்ந்த இவா், தனக்கு அரசுப் பணி வழங்கி உதவிட, மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸிடம் கோரிக்கை வைத்திருந்தாா்.
இதைத் தொடா்ந்து அவருக்கு தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் தற்காலிக கணினி இயக்குநா் பணிக்கான ஆணையை, அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது, தொழிலாளா் நலன் உதவி இயக்குநா் காா்த்திகேயன் உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுமாா் 49 ஆண்டுகள் கோரிக்கைக்கு தீா்வு: 138 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா!

அமோனியா கசிவு சம்பவம் விசாரணை அறிக்கையின்படி நடவடிக்கை! - அமைச்சா் முகமது பா்வேஸ்

கோடைக்காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ்







