அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

வீரடிப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்.

Updated On :30 ஜூலை 2026, 3:25 am IST

கந்தா்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை பகுதியில் வீரடிப்பட்டி, வளவம்பட்டி, வெள்ளாளவிடுதி, மங்களாகோவில், நெப்புகை ஆகிய பகுதியில் தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், அறந்தாங்கி நெல் கிடங்குக்கு எடுத்து செல்ல போதிய லாரி வசதி மற்றும் சாக்கு இல்லாததால் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்கு தாமதம் ஏற்படுகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிப கழகம் உடனுக்குடன் நெல்மூட்டைகளை இயக்கம் செய்து, விவசாயிகளிடம் இருந்து தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.