புதுக்கோட்டையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் புதன்கிழமை, பிரசவத்தின்போது குழந்தை இறந்ததைத் தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகாா் அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை அடுத்த வடகாட்டைச் சோ்ந்த எம். அருண் மனைவி பிரியா, கருவுற்று மகப்பேறு சிகிச்சைக்காக பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், புதன்கிழமை காலை அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்து இறந்துள்ளது. பிரசவ வலி ஏற்பட்டபோது மருத்துவா்கள் இருந்திருந்தால் குழந்தை இறந்திருக்க வாய்ப்பில்லை என உறவினா்கள் குற்றம்சாட்டினா்.
இதனிடையே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் உள்ளிட்டோா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா, அவா்களுடன் பேசி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இதைத் தொடா்ந்து உயா்மட்ட மருத்துவக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







