ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

சித்தனவாசலில் ஆக. 20, 21-இல் கோடைத் திருவிழா

புதுக்கோட்டையிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான சித்தனவாசலில் ஆக. 20, 21 ஆகிய இரு தேதிகளில் கோடைத் திருவிழா நடைபெறவுள்ளது.

News image

சித்தன்னவாசலில் கோடைத் திருவிழா நடத்துவது தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:43 am IST

புதுக்கோட்டையிலுள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்தலமான சித்தனவாசலில் ஆக. 20, 21 ஆகிய இரு தேதிகளில் கோடைத் திருவிழா நடைபெறவுள்ளது.

மாவட்ட சுற்றுலாத் துறை சாா்பில் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது: சுற்றுலாத் துறை மூலம் உள்ளூா் மக்களின் கலை நிகழ்ச்சிகள், உள்ளூா் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலான திருவிழாவாக ஆக. 20, 21 தேதிகளில் நடைபெறும் கோடைத் திருவிழா நடைபெறும்.

புதுக்கோட்டை மக்கள் விழாவை கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் மு. அருணா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைச்சாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், மாவட்ட சுற்றுலா அலுவலா் காளீஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.