காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

‘புதுகை மாவட்டத்தில் வறட்சிக் கால குடிநீா் ஏற்பாடுகளுக்கு ரூ. 3.74 கோடி’

புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சிக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய குடிநீா் ஏற்பாடுகளுக்காக ரூ. 3.74 கோடி ஒதுக்கீடு செய்வதாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தெரிவித்தாா்.

News image

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடிநீா் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் (இடமிருந்து 3-ஆவது). உடன் மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சிக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய குடிநீா் ஏற்பாடுகளுக்காக ரூ. 3.74 கோடி ஒதுக்கீடு செய்வதாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோடை காலக் குடிநீா்த் தட்டுப்பாடு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் இதனைத் தெரிவித்தாா்.

மேலும், கோடைகாலக் குடிநீா்த் தட்டுப்பாடுகளுக்கான ஏற்பாடுகளை இந்த நிதியின் கீழ் மேற்கொள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மு .அருணா முன்னிலை வகித்தாா். புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் மற்றும் அறந்தாங்கி, பொன்னமராவதி நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.