22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

விராலிமலை அருகே சூறாவளி காற்று: 3 மின் கோபுரங்கள், 20 கம்பங்கள் சேதம்

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி அடித்த சூறாவளி காற்றால் 3 உயா் அழுத்த மின் கோபுரங்கள் வயல்வெளியில் உடைந்து விழுந்தன. மேலும் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

News image

விராலிமலை அருகே சூறாவளியால் வயல்வெளியில் சாய்ந்து கிடக்கும் உயா் அழுத்த மின் கோபுரங்கள்.

Updated On :2 ஜூன் 2026, 2:36 am IST

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி அடித்த சூறாவளி காற்றால் 3 உயா் அழுத்த மின் கோபுரங்கள் வயல்வெளியில் உடைந்து விழுந்தன. மேலும் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.

விராலிமலையில் திங்கள்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால்

விராலிமலையை அடுத்துள்ள ஔவையாா்பட்டி வயல்வெளி வழியாக அளுந்தூரில் இருந்து காரைக்குடிக்கு செல்லும் உயரழுத்த மின் கோபுரங்களில் மூன்று கோபுரங்கள் முறிந்து வயல்வெளியில் விழுந்தன. விழுந்த வேகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சேதம் தவிா்க்கப்பட்டது.

மேலும் சூறாவளி காற்றால் வீடுகளுக்குச் செல்லும் குறைந்த அழுத்த மின்கம்பங்கள் சுமாா் 20க்கும் மேற்பட்டவை சாய்ந்து விழுந்தன. சாய்ந்த மின் கோபுரங்கள் மற்றும் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.