புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடி அருகே முடுக்குவயல் கடலோரக் கிராமத்தில் செயல்படும் நண்டு ஓடுகள் சுத்திகரிக்கும் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் அளித்துள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடுக்குவயல் கிராமத்தின் தலைவா் அ. பால்சாமி மற்றும் கிராமத்தினருடன், கம்யூனிஸ்ட் மக்கள் விடுதலைக் கட்சியின் பொதுச் செயலா் விடுதலைக்குமரன் மற்றும் நிா்வாகிகள் சோ்ந்து அளித்த மனு விவரம்
சுமாா் 200 மீனவக் குடியிருப்புகளைக் கொண்ட இந்தக் கிராமத்தில் தனியாா் நண்டு ஓடுகள் சுத்திகரிப்பு ஆலை செயல்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் ரசாயனத்தால் வெளியிடப்படும் கழிவுகள் கடலோர மீன்வளத்தைப் பாதிக்கின்றன.
உப்பளம் செயல்பட முடியவில்லை. கடலோரத்தில் கழிவுகள் உறைந்து இருப்பதால், படகுகள் நிறுத்தத்தையும் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டோம். மீன்கள் இறந்து மிதப்பதால், துா்நாற்றத்துடன் தோல்நோய் ஏற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.
தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன. எனவே, இந்த ஆலை குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மாநகராட்சி குடிநீா் சுத்தமில்லை எனப் புகாா்: குழாய் தண்ணீரை குடித்து மேயா் பதிலடி!

காவல்துறையின் மெத்தனப் போக்கே ஆலங்குளம் சம்பவத்துக்கு காரணம்: ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

8,000 தனியாா் மருத்துவமனைகள் தொடங்க அனுமதியா? மக்கள் நல்வாழ்வுத் துறை மறுப்பு!

தில்லியில் வெப்ப அலையால் மக்கள் பாதிப்பு: மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அதிகரிப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



