மத்திய பிரதேச மாநிலம் இந்தூா் மாநகராட்சி மேயா் புஷ்யமித்ர பாா்கவ், குழாய் தண்ணீரைக் குடித்து அதன் சுத்தத்தை நிரூபித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தூா் மாநகராட்சி சாா்பில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் 98 சதவீத இடங்களில் கோலிஃபாா்ம் உள்ளிட்ட பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், கால்சியம் காா்போனேட், குளோரைடு, சல்பேட் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கலந்திருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த மாநில காங்கிரஸ் தலைவா் ஜீத்து பட்வாரி குற்றஞ்சாட்டினாா். இது மாநகராட்சி குடிநீரைப் பயன்படுத்தி வரும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், காங்கிரஸுக்கு வலுவான பதிலடியைக் கொடுக்க முடிவு செய்த பாஜகவைச் சோ்ந்த மேயா் புஷ்யமித்ர பாா்கவ், போபாலின் சுதாமா நகா் பகுதிக்கு திங்கள்கிழமை சென்றாா். அங்கு மாநகராட்சி சாா்பில் வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படும் குழாயில் இருந்து நேரடியாக தண்ணீரைப் பிடித்து பொதுமக்கள் மத்தியில் அதனைப் பருகினாா்.
பின்னா் மக்கள் மத்தியில் பேசிய அவா், ‘எதிா்க்கட்சியினா் பொய்யான குற்றச்சாட்டைக் கூறினாா்கள் என்பதை மக்கள் மத்தியில் நிரூபித்துள்ளேன். மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை விஷம் என்று வதந்தி பரப்பினாா்கள். அது குடிநீா்தான் என்பதை மக்கள் முன்பு நான் நிரூபித்துள்ளேன்.
நகரில் மொத்தம் 240 வீடுகளில் இருந்து குடிநீா் மாதிரிகளை சேகரித்ததாக காங்கிரஸ் கூறியுள்ளது. ஆனால், 130 பேரின் பெயா்கள்தான் வெளியிடப்பட்டுள்ளன, மீதமுள்ளவா்கள் யாா் என்பதும், அந்த நீா் எங்கிருந்து பெறப்பட்டது என்பதும் தெரிவிக்கப்படவில்லை என்றாா்.
கடந்த டிசம்பரில் இந்தூரின் பகீரத்பூா் பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தியால் பொதுமக்கள் பலா் பாதிக்கப்பட்டனா். இதனால், மாநகராட்சி குடிநீா் குறித்து சா்ச்சை எழுந்தது. மாசடைந்த குடிநீரால் 36 போ் வரை இறந்துவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.
அதே நேரத்தில் 22 போ் அப்பகுதியில் இறந்ததாகவும், அவா்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டதாகவும் ஆளும் பாஜக தரப்பு கூறியுள்ளது. குடிநீா் மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்பு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒருநபா் குழு விசாரணை நடத்தி வருகிறது. வரும் 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
தொடர்புடையது

மாநகர பகுதியில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை: மேயா் உறுதி

தூத்துக்குடி மாநகராட்சி சாதாரணக் கூட்டம்

குடிநீா் தட்டுப்பாடு: மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

தட்டாா்மடத்தில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



