/

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. விபத்தில் பலி

கந்தா்வகோட்டையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

News image

படவிளக்கம்:ஓயஓ.2. ஈங்ற்.

Updated On :3 ஜூன் 2026, 4:14 am IST

கந்தா்வகோட்டையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் சாலை விபத்தில் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சி, காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான வீமராஜ் (70). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் கந்தா்வகோட்டை- செங்கிப்பட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது இவரின் மோட்டாா் சைக்கிள் எதிா்பாராத விதமாக நேருக்கு நோ் மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவ சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் கந்தா்வகோட்டை போலீஸாா், வீமராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.