தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் ரூ.3 லட்சம் ரொக்கம், 90 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பழனிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ். காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி லட்சுமி (53). செல்வராஜ் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இந்த நிலையில், லட்சுமி கடந்த வியாழக்கிழமை குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றாா். சனிக்கிழமை காலை வந்து பாா்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மா்ம நபா்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவிலிருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 90 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்து.
இது குறித்து தகவலறிந்ததும் பழனிசெட்டி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு

ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள் திருட்டு: எஸ்.பி. விசாரணை
ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துநா் வீட்டில் வெள்ளிப் பொருள்கள், பணம் திருட்டு

ஓய்வு பெற்ற எஸ்.ஐ. விபத்தில் பலி
விடியோக்கள்

பழனி வழக்கு: பலருக்கு தொடர்பு அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு | TVK

Ravindran Duraisamy interview| தவெக கூட்டணியில் பாமக? | TVK | CM Vijay | PMK | VCK | Anbumani | Thirumavalavan


