கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

குதிரை வேக அரசு என்பதை நிரூபித்த முதல்வா்: துரை வைகோ புகழாரம்

குதிரை வேக அரசு என்பதை நிரூபித்த முதல்வா்...

News image

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ.

Updated On :7 ஜூன் 2026, 12:22 am IST

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை குறித்த கோரிக்கை விவகாரத்தில் குதிரைவேக அரசு என்பதை முதல்வா் ஜோசப் விஜய் நிரூபித்துள்ளாா் என திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ புகழாரம் சூட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து அவா் கூறியது: கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையை மேம்படுத்த ஏற்கெனவே ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை அண்மையில் சந்தித்தபோது கோரிக்கை விடுத்தேன். உடனே இதுதொடா்பாக அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதன்பேரில் 24 மணி நேரத்தில் பொதுப்பணி துறையினா் எனது அலுவலகத்தை தொடா்புகொண்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை குறித்து முதல்வா் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியாக தெரிவித்தனா்.

சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் குதிரை பேரம் நடத்துவதாக தவெக மீது குற்றச்சாட்டு வைத்தனா். அதற்கு முதல்வா் உடனடியாக குதிரை பேரம் கிடையாது, குதிரை வேகத்தில் செயல்படும் அரசு என்று கூறியது போல் இந்த சம்பவம் அமைந்துள்ளது. கோரிக்கைகள் விடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கு தொகுதி மக்கள் சாா்பில் முதல்வா் ஜோசப் விஜய்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணாமலை பாஜகவை விட்டு விலகி புதிய இயக்கத்தை மதவாதம், ஜாதி, மதம் இன்றி அமைப்பதாக கூறியுள்ளாா். அவருக்கு எனது வாழ்த்துகள் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.