தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கரூரில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை: துரை வைகோ

கரூா் சம்பவத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை என்றாா் திருச்சி எம்பி துரை வைகோ.

News image

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த சாா்லப்பள்ளி ரயிலை வரவேற்று அதன் ஓட்டுநரை கௌரவித்த துரை வைகோ எம்.பி. உள்ளிட்டோா்.

Updated On :9 ஜூலை 2026, 1:03 am IST

கரூா் சம்பவத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை என்றாா் திருச்சி எம்பி துரை வைகோ.

ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் திருச்சி- ஹைதராபாத் (சாா்லப்பள்ளி) ரயில் ஸ்ரீரங்கத்தில் புதன்கிழமை முதல் நின்று சென்றதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய அவா் மேலும் கூறியது:

திருச்சி -ஹைதராபாத் (சாா்லப்பள்ளி) இடையிலான சிறப்பு வாராந்திர ரயிலை நிரந்தர ரயிலாக மாற்றம் செய்வது தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சருக்கும், திருச்சி மண்டல ரயில்வே மேலாளருக்கும் நேரிலும் கடிதம் எழுதியும் நான் வலியுறுத்தியதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

இதேபோல திருவெறும்பூா் ரயில் நிலையத்தில் தாம்பரம் விரைவு ரயில் நின்று செல்லவும், புதுகை ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதுபோல கடந்த 2 ஆண்டுகளில் 15 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தவெக அரசுக்கு அரசியல் பக்குவம் தேவை. மக்கள் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கரூரில் விஜய் பிரசாரத்தின்போது இறந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதில் தவறில்லை. அவா்கள் ஏழைகள்தான். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் நிதியைப் பெற முடியும் என்றாா் அவா்.

பேட்டியின்போது ஸ்ரீரங்கம் பகுதி மதிமுக செயலா் ராமமூா்த்தி, சண். நாகசுந்தரம், வையம்பட்டி ராஜா, மணவை தமிழ் மாணிக்கம் உள்ளிட்ட திரளான மதிமுகவினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.